
அறம் பொருள் இன்பம் மூன்றும் பாடினான் !
அறவழியில் பொருள் ஈட்டுவதே இன்பமென்றான் !
அறவழியே ஆள்வோரின் வழி என்றான் !
அறிவைப் பயன்படுத்துவதே அழகு என்றான் !
அனைவரிடமும் அன்பு செலுத்து என்றான் !
அன்பால் உலகை ஆளலாம் என்றான் !
எவர் சொல்கிறார் முக்கியமல்ல என்றான் !
எதையும் ஆராய்ந்து அறிந்திடு என்றான் !

எந்த உயிரையும் கொல்லாதே என்றான் !
எல்லா உயிரிடமும் அன்பு செய் என்றான் !
உலகமனிதர்கள் யாவரும் சமம் என்றான் !
ஒருபோதும் ஏற்றத்தாழ்வு கூடாது என்றான் !
ஒழுக்கம் உயிரை விட மேலானது என்றான் !
ஒருபோதும் நன்றி மறக்காதே என்றான் !
கணவன் மனைவி கடமைகள் உரைத்தான் !
காதலன் காதலி பண்புகள் உரைத்தான் !
கோபம் மிகக் கொடியது என்றான் !
குணத்தில் சிறந்து வாழ்ந்திடு என்றான் !
பயனில்லாச் சொற்களைப் பேசாதே என்றான் !
பயன்பட வாழ்ந்தால் மரணமில்லை என்றான் !
பகைவருக்கும் நன்மை செய் என்றான் !
பகை வேண்டவே வேண்டாம் என்றான் !
பாடாத பொருளில்லை எனப் பாடினான் !
பாடிய அனைத்திலும் பொருள் வைத்தான் !
பிறர்மனம் புண் படப் பேசாதே என்றான் !
புலால் உண்ணுதல் கூடாது என்றான் !
வாழ்வாங்கு வாழ்ந்திட வழி உரைத்தான்!
வையகத்தின் அமைதிக்குத் தீர்வு வகுத்தான் !
இணையில்லாக் கருத்துக்களை உரைத்தான் !
ஈரடியால் உலகளந்தான் திருவள்ளுவன் !

வாழ்வின் மகத்துவம்
வாழ்வின் அறம் பொருள் இன்பம்.
“ஈரடியில் உலகளந்தான்”
அய்யன் திருவள்ளுவர்
உங்களது பதிவு
மிக அருமை அண்ணா …
ஈரடியால் குரல் தந்த வள்ளுவனுக்கு உங்களின் கவி மாலை போற்றுதல்குறியது.