ஈரடியால் உலகளந்தான்! -கவிதை |இரா.இரவி.

4 0
Spread the love
Read Time:1 Minute, 55 Second

அறம் பொருள் இன்பம் மூன்றும் பாடினான் !

அறவழியில் பொருள் ஈட்டுவதே இன்பமென்றான் !

அறவழியே ஆள்வோரின் வழி என்றான் !

அறிவைப் பயன்படுத்துவதே அழகு என்றான் !

அனைவரிடமும் அன்பு செலுத்து என்றான் !

அன்பால் உலகை ஆளலாம் என்றான் !

எவர் சொல்கிறார் முக்கியமல்ல என்றான் !

எதையும் ஆராய்ந்து அறிந்திடு என்றான் !

எந்த உயிரையும் கொல்லாதே என்றான் !

எல்லா உயிரிடமும் அன்பு செய் என்றான் !

உலகமனிதர்கள் யாவரும் சமம் என்றான் !

ஒருபோதும் ஏற்றத்தாழ்வு கூடாது என்றான் !

ஒழுக்கம் உயிரை விட மேலானது என்றான் !

ஒருபோதும் நன்றி மறக்காதே என்றான் !

கணவன் மனைவி கடமைகள் உரைத்தான் !

காதலன் காதலி பண்புகள் உரைத்தான் !

கோபம் மிகக் கொடியது என்றான் !

குணத்தில் சிறந்து வாழ்ந்திடு என்றான் !

பயனில்லாச் சொற்களைப் பேசாதே என்றான் !

பயன்பட வாழ்ந்தால் மரணமில்லை என்றான் !

பகைவருக்கும் நன்மை செய் என்றான் !

பகை வேண்டவே வேண்டாம் என்றான் !

பாடாத பொருளில்லை எனப் பாடினான் !

பாடிய அனைத்திலும் பொருள் வைத்தான் !

பிறர்மனம் புண் படப் பேசாதே என்றான் !

புலால் உண்ணுதல் கூடாது என்றான் !

வாழ்வாங்கு வாழ்ந்திட வழி உரைத்தான்!

வையகத்தின் அமைதிக்குத் தீர்வு வகுத்தான் !

இணையில்லாக் கருத்துக்களை உரைத்தான் !

ஈரடியால் உலகளந்தான் திருவள்ளுவன் !

கவிஞர் இரா. இரவி
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
100 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
100%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

2 thoughts on “ஈரடியால் உலகளந்தான்! -கவிதை |இரா.இரவி.

  1. வாழ்வின் மகத்துவம்
    வாழ்வின் அறம் பொருள் இன்பம்.
    “ஈரடியில் உலகளந்தான்”
    அய்யன் திருவள்ளுவர்
    உங்களது பதிவு
    மிக அருமை அண்ணா …

  2. ஈரடியால் குரல் தந்த வள்ளுவனுக்கு உங்களின் கவி மாலை போற்றுதல்குறியது.

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!